Thursday 26 January 2017

அம்பை கிளை சங்க மாநாடு

அம்பை கிளை சங்க மாநாடு இன்று (26.01.2017) அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் திரு.V.இராம சுப்பிரமணியன் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.   திருநெல்வேலி கோட்ட தலைவர் திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்கள்  முன்னிலை வகிக்க,
முன்னாள் P4 கிளைசெயலாளர் திரு.K.ஆறுமுகம் அவர்கள்  சங்க கொடி ஏற்றிவைத்தார்.        
திரு திரு இராமர்  அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
கிளை செயலாளர் திரு முத்துசாமி  அவர்கள் ஈராண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் திருமதி கனகவள்ளி அவர்கள், நிதிநிலை அறிக்கை வாசித்தார்.

அதனை தொடர்ந்து அமைப்பு நிலை விவாதங்கள் நடைபெற்றன.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* புதிய நிர்வாகிகள் தேர்வு ஒருமனதாக நடைபெற்றது.

* புதிய மற்றும் ஒய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு நடந்தன.

* கிளைசங்கத்திற்கு புதிய வலைத்தளம் www.fnpoambai.blogspot.in  முன்னாள் கிளைசெயலாளர் திரு.G.சண்முகநாதன் அவர்கள் தொடக்கி வைத்தார்.


கோட்ட பொருளாளர் திரு.M. இரமேஷ் மற்றும்

முன்னாள் கிளைசெயலாளர்  திரு.G.சண்முகநாதன் அவர்கள்  வாழ்த்துரை வழங்கினர். தூத்துக்குடி கோட்டசெயலாளர்  
திரு.N.J.உதய குமாரன், அவர்கள் சிறப்புரையாற்றினார். திரு முத்துசாமி அவர்கள் நன்றியுரையாற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது. 
கூட்ட முடிவில் உறுப்பினர்களுக்கு ஒரு அழகிய Bag ம் தினசரி நாட்காட்டியும் வழங்கப்பட்டன.


 
















No comments:

Post a Comment